அணுவாற்றல் வழங்குவோர் குழுமம்
From Wikipedia, the free encyclopedia
அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் (Nuclear Suppliers Group - NSG) அணிவாயுதப் பரவலை குறைககும் நோக்கத்துடன் இயங்கும் ஓர் பல நாடுகள் கொண்ட அமைப்பாகும். அணுவாயுதங்களை தயாரிக்கப் பயன்படும் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் மறுமாற்றலைக் கட்டுப்படுத்தியும் ஏற்கனவே உள்ள அணுப்பொருள்களை காப்பதையும் பயன்படுத்துவதையும் மேம்படுத்தியும் இந்நோக்கத்தை நிறைவேற்றுகிறது.இந்தியா 1974ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதத்தை வெடித்த பிறகு உருவான இக்குழு ஆணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளுக்கு, அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (NPT)கையொப்பமிடாதவரை, அணுவாற்றலுக்குரிய பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது.
துவக்கத்தில் இக்குழுவில் ஏழு அங்கத்தினர்கள் இருந்தனர்: கனடா, மேற்கு செருமனி, பிரான்சு, யப்பான், உருசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா. தற்போது 48 நாடுகள் இக்குழு அங்கத்தினர்களாக உள்ளனர்.
இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் செப்டம்பர் 6, 2008 அன்று இந்தியாவிற்கு பிற நாடுகளிடமிருந்து அணுவாற்றல் தொடர்புடைய எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப வணிகத்திற்கு ஒப்புமை அளித்தது.[1] இதன்மூலம் அணுப்பரவாமை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாதும் அணுஆயுதம் கொண்டிருந்தும் அணுவாற்றல் வணிகம் அனுமதிக்கப்படிருக்கும் முதல் நாடு இந்தியாவாகும்.[2]