ஆண்ட்ரியசு வெசாலியசு
பெல்சியம் உடற்கூறியல் நிபுணர், மருத்துவர் மற்றும் எழுத்தாளர் (1514-1564) / From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ரியசு வெசாலியசு (Andreas Vesalius) [1] 31 டிசம்பர் 1514 – முதல் 15 அக்டோபர் 1564 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பெல்சியம் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். உடற்கூற்றியல், மருத்துவரான இவர் மனித உடற்கூற்றியல் பற்றி ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களுக்கு இவருடைய நூல்கள் பெரிதும் உதவியதால் இவரை நவீன மனித உடற்கூற்றியலின் நிறுவனர் என்று சிறப்பித்துக் கூறுவார்கள். பெல்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த பிரசெல்சு நகரில் வெசாலியசு பிறந்தார். பாதுவாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பின்னர் பேரரசர் ஐந்தாம் சார்லசின் அவையில் மருத்துவராகவும் வெசாலியசு பணியாற்றினார்.
ஆண்ட்ரியசு வெசாலியசு | |
---|---|
பிறப்பு | (1514-12-31)31 திசம்பர் 1514 பிரசெல்சு |
இறப்பு | 15 அக்டோபர் 1564(1564-10-15) (அகவை 49) |
துறை | உடற்கூற்றியல் |
கல்வி கற்ற இடங்கள் | பவியா பல்கலைக்கழகம், படுவா பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | மேட்டியோ ரியால்டோ கொலம்போ |
அறியப்படுவது | மனித உடற்கூற்றியலின் கட்டமைப்பு |
தாக்கம் செலுத்தியோர் | காலென் யாக்குவசு துபாயிசு யீன் பெர்னெல் |
பின்பற்றுவோர் | காப்பிரியல் பாலோப்பியோ |
ஆண்ட்ரியசு வெசாலியசு என்ற பெயர் ஆண்ட்ரீசு வான் வெசெல் என்ற பெயரின் டச்சு வடிவமாகும். அக்காலத்தில் ஐரோப்பிய அறிஞர்கள் தங்கள் பெயர்களை இவ்வாறு இலத்தினாக்கம் செய்து கொள்வது பொதுவான பழக்கமாக இருந்தது. ஆண்ட்ரி வெசேல், ஆண்ட்ரியா வெசாலியோ, ஆண்ட்ரியாசு வெசெல், ஆண்ட்ரி வெசாலியோ, ஆண்ட்ரி வெசாலிப்போ என்று பலவறாக ஆண்ட்ரியா வெசாலியசு அழைக்கப்பட்டார்.