இந்தியாவின் பசுமைப் புரட்சி
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் பசுமைப் புரட்சி (Green Revolution in India) என்று 1966ஆம் ஆண்டு முதல் இந்திய உணவுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீரிய ஒட்டு விதைகள், மேம்பட்ட உரவகைகள், மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டால் வேளாண்மை மேம்படுத்தப்பட்டு உணவுத் தன்னிறைவு பெற்றதே பசுமைப் புரட்சி ( Green Revolution) என்று அறியப்படுகிறது. அடிக்கடி பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஒருமுறை கூட பஞ்சம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1963ஆம் ஆண்டில் முனைவர் நார்மன் போர்லாக் இந்தியாவில் மரபுமாற்ற வீரிய கோதுமை விதைகளை அறிமுகப்படுத்தினார். இவரே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1]
நவீன இந்தியாவின் வரலாறு | |
குறித்த தொடரின் அங்கம் | |
விடுதலைக்கு முன்பு | |
பிரித்தானிய இந்தியப் பேரரசு (1858–1947) | |
இந்திய விடுதலை இயக்கம் (1857–1947) | |
இந்தியப் பிரிவினை (1947) | |
விடுதலைக்குப் பின்பு | |
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (1947–49) | |
மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956) | |
கூட்டுசேரா இயக்கம் (1956– ) | |
பசுமைப் புரட்சி (1970கள்) | |
இந்தியப் பாக்கித்தான் போர் | |
நெருக்கடி நிலை (1975–77) | |
இந்தியாவின் பொருளியல் தாராளமயமாக்கல் | |
2020களில் இந்தியா | |
இவற்றையும் காண்க | |
இந்திய வரலாறு | |
தெற்காசிய வரலாறு | |