இரணைதீவு
From Wikipedia, the free encyclopedia
இரணைதீவு (Iranaitivu)[1][2] இலங்கையில் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். ஈழப்போரின் போது 1992 ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆயுதப் படைகளின் தளமாக இருக்கும் இத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்ற தீவின் முன்னாள் குடியிருப்பாளர்கள் 2018 முதல் இங்கு மீண்டும் படிப்படியாகக் குடியேறி வருகின்றனர்.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மன்னார் வளைகுடா |
ஆள்கூறுகள் | 9°17′31″N 79°58′54″E |
நிர்வாகம் | |
மக்கள் | |
மொழிகள் | தமிழ் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
மூடு
கோவிடு-19 பெருந்தொற்றினால் இறந்த முசுலிம்களின் உடல்களை இத்தீவில் புதைப்பதற்கு ஏற்ற இடமாக இலங்கை அரசு 2021 மார்ச் 2 அன்று அறிவித்தது.[3]