இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள் அல்லது இலங்கையின் பிரித்தானிய தேசாதிபதிகள் (British governors of Ceylon) என்போர் 1798 முதல் 1948 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை இருந்தபோது ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் அல்லது அரசியின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்த அலுவலர் ஆவர்.
இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்து 1948 இல் முடிக்குரிய குடியரசாக ஆக்கப்பட்ட பின்னர் இப்பதவி இலங்கையில் பிரித்தானிய மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் மகா தேசாதிபதி என்ற அலுவலரால் பிரதியிடப்பட்டது. அதாவது, மகா தேசாதிபதி பிரித்தானிய மணிமுடியைப் பிரநிதித்துவப்படுத்தினாரே தவிர பிரித்தானிய அரசாங்கத்தையல்ல. 1972 இல் இலங்கை குடியரசாக மாற்றப்பட்ட பின்னர் மேற்படி பதவி அகற்றப்பட்டு சனாதிபதி பதவியின் மூலம் பிரதியிடப்பட்டது.