இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007
From Wikipedia, the free encyclopedia
இலங்கை சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினையை தீர்ப்பதையும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காப்பதையும் முதன்மை நோக்கங்களாக கொண்டு மே 1, 2007 அன்று All Party Representative Committee (APRC) க்கு சமர்ப்பித்த திட்டமே இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்போதைய அதிகாரம் மிக்க சனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக வாக்குபதிவு, மாவட்ட நிலையில் அதிகாரப் பரவலாக்கம், சிங்களத் தமிழ் மொழிகளுக்கு சம உரிமை போன்ற விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.