இலையுதிர்
From Wikipedia, the free encyclopedia
இலையுதிர் காடுகள் (deciduous) (/dɪˈsɪdʒuəs/) எனப்படுபவை தாவரவியல் துறைக் கூற்றுப்படி, [1] "முதிர்ச்சியின் முடிவில் விழுதல்"[2] மற்றும் "விழுந்துவிடும் தன்மை" கொண்ட காடுகள்[3] எனப் பொருள்படுகிறது. பொதுவாக மரங்கள் மற்றும் புதர் தாவரங்கள் இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்க்கும். மலர்ந்த பிறகு இதழ்களை உதிர்க்கும் மற்றும் பழுத்த பின் பழங்களை உதிர்ப்பதனை இதற்கு சான்றுகளாகக் கூறலாம்.
இலையுதிர் மரங்களின் கட்டைகள் தொழிற்சாலைகளில் பலவிதங்களில் பயன்படுகின்றன. மரச்சாமான்கள் தயாரிக்க, கட்டுமானத்திற்கு, தளங்கள் அமைக்க, அழகுக் கலைப் பொருட்களை உருவாக்க, பேஸ்பால் மட்டைகள் தயாரிக்க, நீள் பலகைகளாகச் செதுக்க என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.