ஊர்-நம்மு
சுமேரிய அரசர் / From Wikipedia, the free encyclopedia
ஊர்-நம்மு (Ur-Nammu or Ur-Namma, Ur-Engur, Ur-Gur), சுமேரியம்: 𒌨𒀭𒇉, (கிமு 2047- கிமு 2030), அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவின் சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவியவரும், ஊர் நகர அரசை 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னரும் ஆவார். இவர் சந்திரக் கடவுளுக்கு எழுப்பிய ஊரின் சிகூரட் கோயில் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் ஊர்-நம்மு, புது சுமேரியப் பேரரசு ...
ஊர்-நம்மு | |
---|---|
ஊர், சுமேரியா மற்றும் அக்காதியப் பேரரசர் | |
மன்னர் ஊர்-நம்முவின் உருளை வடிவ முத்திரை | |
புது சுமேரியப் பேரரசு | |
ஆட்சி | கிமு 2112 – கிமு 2095 |
பின்வந்தவர் | சுக்லி |
அரசி | மன்னர் உது ஹெங்கலின் மகள் |
வாரிசு(கள்) | சுக்லி |
சமயம் | சுமேரிய சமயம் |
மூடு
மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு இயற்றியது, ஊர் நகர அரசை கட்டி எழுப்பியது மற்றும் ஊரின் சிகூரட் கோயில் நிறுவியதே[1][2][3] இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.