எகிப்தின் மத்தியகால இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் மத்தியகால இராச்சியம் (Middle Kingdom of Egypt) (இது எகிப்திய இராச்சியத்தின் ஒருங்கிணைப்புக் காலம் என்றும் அறியப்படுகிறது). கிமு 2050 முதல் 1650 முடிய 400 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்ட இராச்சியம் ஆகும். பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப், மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்து, கிமு 2050-இல் மத்தியகால இராச்சியத்தை நிறுவினார்.[1]
விரைவான உண்மைகள் எகிப்தின் மத்தியகால இராச்சியம்11 மற்றும் 12-ஆம் வம்சம், தலைநகரம் ...
கிமு 2055–கிமு 1650 | |||||||||
தலைநகரம் | தீபை, இட்ஜ்தாவி | ||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | தெய்வீக முடியாட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• கிமு 2061 – 2010 | இரண்டாம் மெண்டுகொதேப் (முதல்) | ||||||||
• கிமு 1806 | நான்காம் அமெனம்ஹத் (இறுதி) | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிமு 2055 | ||||||||
• முடிவு | கிமு 1650 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
மூடு
மத்தியகால எகிப்திய இராச்சியத்தை, எகிப்தின் பதினொன்றாம் வம்சம் மற்றும் பனிரெண்டாம் வம்சத்தினர் ஆண்ட காலப் பகுதிகளாக பிரிக்கலாம். 11வது வம்சத்தினர் தீபை நகரத்தை தலைநகரமாகக் கொண்டு எகிப்தை ஆண்டனர். 12-வது வம்சத்தினர் லிஸ்டு நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். மத்தியகால எகிப்திய இராச்சியத்தில் ஒசைரிஸ் கடவுள் மக்களிடையே புகழ்பெற்றது.[1][2]