எல்லாளன் நடவடிக்கை 2007
From Wikipedia, the free encyclopedia
எல்லாளன் நடவடிக்கை[1] என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும்[2] இலங்கை வான்படையினர் 13 பேரும் இராணுவத்தினரில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டனர்.[3] மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்.[3]
விரைவான உண்மைகள் எல்லாளன் நடவடிக்கை, காலம் ...
எல்லாளன் நடவடிக்கை | |||||
---|---|---|---|---|---|
நான்காவது ஈழப் போர் | |||||
| |||||
அணிகள் | |||||
இலங்கை வான்படை | தமிழ்ப் புலிகள் | ||||
தலைவர்கள் | |||||
குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க | லெப். கேணல் இளங்கோ | ||||
குழுவினர் | |||||
தளத்திலிருந்த வான்படையினர் | 21 சிறப்புக் கரும்புலிகள் | ||||
இழப்புக்கள் | |||||
14 பேர் பலி 8 விமானங்கள் அழிவு |
21 பேர் பலி | ||||
|
மூடு