ஏர்மன் மெல்வில்
From Wikipedia, the free encyclopedia
ஏர்மன் மெல்வில் (ஹெர்மன் மெல்வில், Herman Melville, ஆகத்து 1, 1819 – செப்டெம்பர் 28, 1891, ) ஒரு அமெரிக்க புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், கவிஞரும் ஆவார். மொபி-டிக் என்னும் புதினம் எழுதியதன் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார். இவரது முதல் மூன்று நூல்கள் சமகாலத்தில் புகழ் பெற்றன. 1840களில் விரைவாக ஏற்பட்ட இவரது இலக்கிய வெற்றிகளைத் தொடர்ந்து 1850 களின் நடுப் பகுதியில் இவரது புகழ் குறையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சியில் இருந்து அவரது வாழ்க்கைக் காலத்தில் அவர் மீளவே இல்லை. 1891 ஆம் ஆண்டில் மெல்வில் இறந்தபோது அவரைப் பலரும் முற்றாகவே மறந்துவிட்டிருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "மெல்வில் மறுமலர்ச்சி" ஏற்பட்டபோது மீண்டும் அவரது படைப்புக்களுக்கு மதிப்புக் கிடைத்தது. சிறப்பாக மொபி-டிக் அமெரிக்க இலக்கியத்தினதும், உலக இலக்கியத்தினதும் தலைசிறந்த படைப்புக்களுள் ஒன்றாகப் புகழப் பெற்றது. அமெரிக்க நூலகம் முதன் முதலாகத் தொகுத்து வெளியிட்டது இவரது ஆக்கங்களையே ஆகும்.[1][2][3]
ஏர்மன் மெல்வில் | |
---|---|
ஏர்மன் மெல்வில், 1870 | |
பிறப்பு | (1819-08-01)ஆகத்து 1, 1819 நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா. |
இறப்பு | செப்டம்பர் 28, 1891(1891-09-28) (அகவை 72) நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா. |
தொழில் | புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், ஆசிரியர், மாலுமி, விரிவுரையாளர், கவிஞர், சுங்கக் கண்காணிப்பாளர் |
தேசியம் | அமெரிக்கர் |
வகை | பயண இலக்கியம், கைதி கதைகூறல், கடல் கதைகள், கோதியப் புனைவியம், உருவகம், புழுகுக் கதை |
இலக்கிய இயக்கம் | புனைவியம், ஐயவாதம்; புதுமவிய முன்னோடி, அபத்தவாத முன்னோடி, இருப்பியல்வாதம் |
கையொப்பம் | |