கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001
From Wikipedia, the free encyclopedia
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இலங்கை உள்நாட்டுப் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை வான்படை | கரும்புலிகள் | ||||||
பலம் | |||||||
1 இராணுவ காவற்படை | 14 தற்கொலை வீரர்கள் | ||||||
இழப்புகள் | |||||||
7 கொல்லப்பட்டனர், 12 காயப்பட்டனர் அழிக்கப்பட்ட வானூர்திகள்: 1 எம்ஐ-17 உலங்குவானூர்தி, 1 எம்ஐ-24 உலங்குவானூர்தி, 3 கே-8 பயிற்சி விமானங்கள், 2 கிபிர் சண்டை விமானங்கள், 1 மிக்-27 சண்டை விமானட', 3 எயபஸ் சேதமாக்கப்பட்ட வானூர்திகள்: 5 கே-8 பயிற்சி விமானங்கள், 5 கிபிர் சண்டை விமானங்கள், 1 மிக்-27 கிபிர் சண்டை விமானம், 2 எயபஸ், 1 இராணுவ வானூர்தி | 14 கொல்லப்பட்டனர் |
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.