கன்னோசி
From Wikipedia, the free encyclopedia
கன்னௌசி அல்லது கனௌச் அல்லது கன்னோசி (Kannauj) (இந்தி: कन्नौज), (formerly known in English as 'Cannodge'), வட இந்தியாவின், உத்தரப் பிரதேசம் மாநிலம், கன்னாஜ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும், நகர் மன்றமாகவும் உள்ளது. பண்டைய பாஞ்சால நாட்டின் தென் பகுதிக்கு, கன்னோஜ் என்ற கன்யாகுப்ஜம் தலைநகராக இருந்தது.[1] கன்னௌசி நகரத்தை தலைநகராகக் கொண்டு பேரரசர் ஹர்ஷவர்தனர் வட இந்தியாவை ஆண்டார். மேலும் பல வட இந்திய மன்னர்களின் அரசின் தலைநகராக கன்னௌசி விளங்கியது.
கன்னோசி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27.07°N 79.92°E / 27.07; 79.92 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | கன்னோஜ் |
ஏற்றம் | 139 m (456 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 84,862 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி & உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 209725 |
வாகனப் பதிவு | UP-74 |
இணையதளம் | www |
1018இல் கஜினி முகமது கன்னௌசி நகரை வென்றான். கஹாத்வால குலத்தை நிறுவிய சந்திர தேவ மன்னர், 1090இல் கன்னௌசியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்.
இவனின் பேரன் கோவிந்தசந்திரன் கன்னோசியை உச்சியின் புகழுக்கு கொண்டு சென்றார். கோரி முகமது, 1193இல் கன்னோசியின் ஜெயச்சந்திரனை கொன்றான். தில்லி சுல்தான் இல்ட்டுமிஷ் கன்னோசியை வென்றதன் மூலம் கன்னோசியின் புகழ் வீழ்ந்தது.[2]:21,32-33