1956 கல்லோயா படுகொலைகள்
From Wikipedia, the free encyclopedia
கல்லோயா கலவரம் அல்லது கல்லோயா படுகொலைகள் என்பது விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இனவெறித்தாக்குதல் ஆகும்[3]. கலவரம் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான தமிழரைக் கொன்றனர். 150 க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பாராமுகமாக இருந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும், பின்னர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விரைவான உண்மைகள் கல்லோயா கலவரம், இடம் ...
கல்லோயா கலவரம் | |
---|---|
இடம் | இலங்கை |
நாள் | ஜூன் 11–16, 1956 (+6 GMT) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | முக்கியமாக இலங்கைத் தமிழ் பொதுமக்கள் |
தாக்குதல் வகை | படுகொலைகள், எரிப்பு, கத்திக்குத்துகள் |
ஆயுதம் | கத்திகள், பொல்லுகள், நெருப்பு |
இறப்பு(கள்) | 150[1][2][3] |
காயமடைந்தோர் | 100+ |
தாக்கியோர் | சிங்களக் காடையர்[4] |
மூடு