கிளிநொச்சிப் போர் (2008–2009)
From Wikipedia, the free encyclopedia
கிளிநொச்சி நகரை இலங்கை படைத்துறை கைப்பற்றியிருப்பதாக குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச நாட்டு மக்களுக்கு ஜனவரி 2, 2009 அன்று அறிவித்தார். "தெற்கே இரணைமடு சந்தியிலும், வடக்கே பரந்தன் சந்தியிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், கிளிநொச்சி நகருக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் உள்ள மற்றுமொரு முக்கிய சந்தியாகிய கரடிப்போக்கு சந்தியையும், கிளிநொச்சி நகரின் ரயில் நிலையப்பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இன்று காலை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது."[3] இப்படியான அறிவிப்புகள் முன்னர் வெளியிடப்பட்டாலும், ஈழப் போராட்ட ஆதரவு செய்தி வலைத்தளமான தமிழ்நெற்ரிலும் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.[4] அச் செய்தியின் படி விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தியபடி பெருமளவு இழப்புகள் இல்லாமல் பின்னகர்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் நாள், இடம் ...
கிளிநொச்சி போர் (2008-2009) | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப் போர் பகுதி | |||||||
கிளிநொச்சி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை படைத்துறை | தமிழீழ விடுதலைப் புலிகள் |
||||||
இழப்புகள் | |||||||
இலங்கை இராணுவம்: தரவுகளில்லை[1] | விடுதலைப் புலிகள்: குறைந்தளவு[2] |
மூடு