குடையுருமஞ்சரி
From Wikipedia, the free encyclopedia
அம்பெல் அல்லது குடை மஞ்சரியில் மையத்தண்டு தனித்தோ கிளைத்தோ காணப்படலாம். ஆனால் மஞ்சரித்தண்டின் செங்குத்தான வளர்ச்சி திடீரென்று தடைபட்டு, நுனியில் கொத்தான பூவடிச்செதில்கள் தோன்றுகின்றன. இவை வட்டப்பூவடிச்செதில்கள் (இன்வலுகர் ஆப் பிராக்ட்சு) எனப்படும். இவற்றின் கோணங்களிலிருந்து ஒரே நீளமுள்ள காம்புடைய மலர்கள் குடை போன்ற அமைப்பில் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டு - அல்லியம் சீபா (வெங்காயம்) [1]