கே. எஸ். திம்மையா
From Wikipedia, the free encyclopedia
ஜெனரல் கேடேந்திர சுப்பையா திம்மையா (Kodendera Subayya Thimayya), இந்தியத் தரைப்படையின் 3-வது தலைமைப் படைத்தலைவராக 1957 முதல் 1961 முடிய செயல்பட்டவர். 1962-இல் இந்திய சீனப் போரில் இவர் பிரித்தானிய இந்தியாவின் சார்பாக இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்.[4] கொரியப் போருக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக போர்க் கைதிகளை பரிவர்த்தனை செய்வதில் தலைமை வகித்தார்.
விரைவான உண்மைகள் ஜெனரல்கோடேந்திர சுப்பையா திம்மையா, இந்திய இராணுவத்தின் 3-வது தலைமைப் படைத்தலைவர் ...
ஜெனரல் கோடேந்திர சுப்பையா திம்மையா | |
---|---|
ஜெனரல் கே. எஸ். திம்மையா | |
இந்திய இராணுவத்தின் 3-வது தலைமைப் படைத்தலைவர் | |
பதவியில் 8 மே 1957 – 7 மே 1961 | |
முன்னையவர் | ஜெனரல் எஸ். எம். ஸ்ரீநாகேஷ் |
பின்னவர் | பி. என். தாபர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1906-03-31)31 மார்ச்சு 1906
[1][2] மடிகேரி, குடகு மாவட்டம், மைசூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | (1906-03-31)31 மார்ச்சு 1906 சைப்பிரஸ் |
இராணுவப் பணி | |
சார்பு | பிரித்தானிய இந்தியா இந்தியா |
சேவை/ | பிரித்தானிய இந்திய இராணுவம் இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1926 – 1961 |
தரம் | ஜெனரல் |
தொடரிலக்கம் | AI-944[3] |
படைப்பிரிவு | 19-வது ஐதராபாத் ரெஜிமெண்ட் |
கட்டளை | கிழக்கு பிராந்திய இராணுவத் தலைவர் தென் பிராந்திய இராணுவத் தலைவர் மேற்கு பிராந்திய இராணுவத் தலைவர் 19-வது தரைப்படைத் தலைவர் 268-வது தரைப்படைத் தலைவர் 19-வது ஐதராபாத் ரெஜிமெண்ட் |
விருதுகள் | பத்ம பூசண் இராணுவச் சிறப்புப் பணிக்கான விருது |
மூடு
பணி ஓய்வுக்குப் பின்னர், ஜெனரல் திம்மையா, ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக, சைப்பிரசு நாட்டில் இருந்த ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிப் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக சூலை 1964 முதல் டிசம்பர் 1965 முடிய பணியாற்றுகையில் 18 டிசம்பர் 1965 அன்று மாரடைப்பால் மறைந்தார்.