கொல்லம் போர்த்துகீசியக் கல்லறை
இந்தியாவில் உள்ள ஒரு கல்லறை / From Wikipedia, the free encyclopedia
கொல்லம் போர்த்துகீசிய கல்லறை (Portuguese Cemetery, Kollam) இந்தியாவின் கொல்லம் நகரில் உள்ள தங்கசேரியில் அமைந்துள்ளது. போர்த்துகீசியர்களின் படையெடுப்பின் ஒரு பகுதியாக 1519 ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது.. டச்சுக்காரர்களின் படையெடுப்பிற்குப் பிறகு, இது டச்சு கல்லறையாக மாறியது. தங்கசேரி கலங்கரை விளக்கத்திற்கும் இக்கல்லறைக்கும் இடையே உள்ள ஒரு சிறிய கால்வாயான பக்கிங்காம் கால்வாய் போர்த்துகீசிய கல்லறைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.[1][2] தங்கசேரி கடற்கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் கடற்கொள்ளையர்களின் குழு ஒன்று முன்பு கல்லறையில் வசித்து வந்தது.[3] புனித தாமசு கோட்டை மற்றும் போர்த்துகீசிய கல்லறையின் எச்சங்கள் தங்கசேரியில் இன்னும் உள்ளன.
விரைவான உண்மைகள் Details, Established ...
Details | |
---|---|
Established | 1519 |
Location | தங்கசேரி, கொல்லம் நகரம் |
Country | இந்தியா |
Coordinates | 8.881937°N 76.567309°E / 8.881937; 76.567309 |
Type | போத்துக்கீசர் |
Style | போர்த்துகீசிய காலனித்துவக் கட்டிடக்கலை |
Number of graves | தெரியவில்லை |
மூடு