கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)
From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் மாவட்டம் (Coimbatore district) பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இது தற்கால கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய தமிழ்நாட்டு மாவட்டங்களையும் கருநாடகத்தின் தற்கால கொல்லேகல் வட்டத்தையும் உள்ளடக்கியது. இதன் மொத்தப் பரப்பளவு 20,400 சதுர கிலோமீட்டர்களாக (7,860 ச மைல்) இருந்தது. இந்த மாவட்டத்தில் பத்து வட்டங்கள் இருந்தன. இதன் நிர்வாகத் தலைநகரமாக கோயம்புத்தூர் நகரம் இருந்தது. பெரும்பாலான மாவட்டவாசிகள் தமிழர்களாக இருந்தபோதும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர்.[1][2]
விரைவான உண்மைகள்
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் | |||||
மாவட்டம் சென்னை மாகாணம் | |||||
| |||||
கொடி | |||||
ஆறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் உருவாவதற்கு முன்னதான கோவை மாவட்டத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | கோயம்புத்தூர் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1805 | |||
• | தற்கால கோயம்புத்தூர் மாவட்டம் | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 20,357 km2 (7,860 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 22,01,752 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 108.2 /km2 (280.1 /sq mi) | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Coimbatore". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press. 652–653. |
மூடு