சிவநாத் சாத்திரி
From Wikipedia, the free encyclopedia
சிவநாத் சாத்திரி (Sivanath Shastri) அல்லது சிபநாத் சாத்திரி (31 சனவரி 1848 - 30 செப்டம்பர் 1919) என்பவர் வங்காள சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அறிஞர், ஆசிரியர் தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.[1][2] பக்தியுள்ள இந்து குடும்பத்தில் பிறந்த இவர் இளமையில் பிரம்ம சமாஜத்தில் ஈர்க்கப்பட்டார். இவரது கவிதைத் தொகுப்பு பூஷமாலா மற்றும் பூஷாஞ்சலி ஆகும். இவரது நாவல்கள் யுகாந்தர் மற்றும் நயன்தாரா ஆகும். இவரது சுயசரிதை மற்றும் ராம்தானு லஹிரி ஓ தட்கலின் பங்கா சமாஜ் மற்றும் மத வாழ்க்கை பற்றிய புத்தகம், தர்மஜீவன் குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும். இவர் பிரம்ம சமாஜத்தின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் சிவநாத் சாத்திரிSivanath Sastri, பிறப்பு ...
சிவநாத் சாத்திரி Sivanath Sastri | |
---|---|
பிறப்பு | 31 சனவரி 1847 சுபாசுகிராம், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இறப்பு | 30 செப்டம்பர் 1919 (வயது 72) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சமசுகிறித கல்லூரி பள்ளி |
பணி | கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் |
அமைப்பு(கள்) | பிரம்ம சமாஜம் |
மூடு