சிவனேசத்துரை சந்திரகாந்தன்
From Wikipedia, the free encyclopedia
பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிறப்பு: ஓகஸ்ட் 18, 1975) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்[1] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) கட்சியின் தலைவருமாவார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிந்து சென்று கருணா குழுவில் முக்கிய தலைவராக செயற்பட்டார்.
விரைவான உண்மைகள் சிவனேசதுரை சந்திரகாந்தன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ...
சிவனேசதுரை சந்திரகாந்தன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
கிழக்கு மாகாணத்தின் 1-வது முதலமைச்சர் | |
பதவியில் 16 மே 2008 – 18 செப்டம்பர் 2012 | |
முன்னையவர் | வெற்றிடம் கொழும்பின் நேரடி ஆட்சி |
பின்னவர் | நஜீப் அப்துல் மஜீத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஆகத்து 1975 (1975-08-18) (அகவை 48) கல்குடா, மட்டக்களப்பு மாவட்டம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் |
இணையத்தளம் | chandrakanthan.com |
மூடு
2007 ஏப்ரலில் தமவிபு கட்சியில் இடம்பெற்ற உள்ளக மோதலை அடுத்து, கருணா கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிள்ளையான் கட்சித் தலைவரானார். 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார்.[2]