சுரேந்திர வர்மா
From Wikipedia, the free encyclopedia
சுரேந்திர வர்மா (Surendra Verma ) (பிறப்பு 1941: செப்டம்பர் 7) இவர் ஒரு முன்னணி இந்தி எழுத்தாளரும், நாடக ஆசிரியருமாவார். [1] இவர் ஒரு நாடக ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நாடகம் சூர்யா கி ஆன்டிம் கிரண் சே சூர்யா கி பஹ்லி கிரண் தக் என்பது (சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை, 1972) மிகவும் பிரபலமானது; இது ஆறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [2] இவர் தேசிய நாடகப் பள்ளியுடன் நீண்டகால தொடர்பு கொண்டிருந்தார் .மேலும் சிறுகதைகள், நையாண்டிகள், புததினங்கள் மற்றும் நாடகங்களின் பதினைந்து தலைப்புகளை வெளியிட்டுள்ளார்.
விரைவான உண்மைகள் சுரேந்திர வர்மா, பிறப்பு ...
சுரேந்திர வர்மா | |
---|---|
போபால், பாரத் பவனில் சகுந்தலா கி அங்கூதி நாடகத்தைப் பார்த்த பிறகு | |
பிறப்பு | 7 செப்டம்பர் 1941 (1941-09-07) (அகவை 82) ஜான்சி, United Provinces, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
தொழில் | writer, playwright |
மூடு
1993இல் சங்கீத நாடக அகாதமி விருது , 1996இல் சாகித்ய அகாடமி விருது மற்றும் 2016இல் வியாஸ் சம்மான் ஆகியவற்றை இவர் வென்றுள்ளார்