செக்கரியாவின் பாடல்
From Wikipedia, the free encyclopedia
செக்கரியாவின் பாடல் என்பது விவிலியத்தின் லூக்கா நற்செய்தி 1:68-79இல் உள்ள பாடலாகும். இப்பாடலை திருமுழுக்கு யோவானின் பிறப்பின்போது அவரின் தந்தை செக்கரியா பாடியதாக விவிலியம் குறிக்கின்றது.[1] கத்தோலிக்க திருச்சபையில் இப்பாடல் திருப்புகழ்மாலையின் காலைப் புகழில் பயன்படுத்தப்படுகின்றது. இது நூர்சியாவின் பெனடிக்ட்டால் முதன் முதலில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டது.[2] இப்பாடல் ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனிய சபைகளின் காலை மன்றாட்டிலும் இடம்பெறுகின்றது.