சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்
From Wikipedia, the free encyclopedia
சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பிரிவுகள் (Divisions of Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணம், தற்கால தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்த அனைத்துப் பகுதிகளும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.
மேலும் பிரித்தானியா ஆட்சிக்கு அடங்கிய புதுக்கோட்டை சமஸ்தானம் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானங்கள், 1950ல் இந்தியாவிடன் இணைக்கும் வரை, சென்னை மாகாணத்தின் மேலாட்சியின் கீழ் இருந்தது.
1953ல் சென்னை மாகாணத்தில், தெலுங்கு பேசும் ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டு, ஆந்திரப் பிரதேசம் புதிதாக நிறுவப்பட்டது.
1959ல், சென்னை மாகாணத்தின் கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகளை, மைசூர் இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.