சௌகத் உஸ்மானி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சௌகத் உஸ்மானி , (1901-1978) , இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் , ஒரு இயக்கமாக உருவாவதற்கு முன்பே தனித் தனியாக இயங்கி வந்த இளம் பொதுவுடைமைவாதிகளில் ஒருவர் .1920 இல் தாஷ்கந்தில் இந்திய பொதுவுடைமை இயக்கதின் கிளை உருவாக்கப்பட்டபோதும் , 1925 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஐ) உருவான போதும் அதனுடன் தொடர்பில் இருந்தார் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பிராகவும் இருந்தார் .ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திற்க்கு இந்தியாவில் இருந்தபடியே போட்டியிட்ட ஒரே நாபர் ஆவர் . அவர் அந்த தேர்தலை சிறையில் இருந்தவாரே சந்தித்தார் .1923 கான்பூர் சதி வழக்கு , 1929 மீரட் சதி வழக்கு ஆகிய வழக்குகளில் மொத்தம் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார் .