சௌராஷ்டிர மாநிலம்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
சௌராஷ்டிர மாநிலம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாநிலம் என்பது ராஜ்கோட் நகரத்தை தலைநகராக கொண்டு 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய இந்தியாவின் தற்கால குஜராத்தில் உள்ள சௌராட்டிர தீபகற்பத்தில் இருந்த மாநிலம் ஆகும்.[1] இதன் தலைநகரமாக ராஜ்கோட் நகரம் இருந்தது. 1 சூலை 1950 அன்று ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா துவக்கப்பட்டது. 1948இல் சௌராஷ்டிர மாகாணத்தின் முதல் தலைமை அமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
சௌராஷ்டிரா மாநிலம் ஐக்கிய கத்தியவார் மாநிலம் | |||||
இந்திய மாநிலம் | |||||
| |||||
1951-இல் சௌராஷ்டிரா மாநிலத்தின் வரைபடம் | |||||
தலைநகரம் | ராஜ்கோட் | ||||
வரலாறு | |||||
• | பரோடா மற்றும் குஜராத் முகமையை கலைத்தல் | 15 பிப்ரவரி 1948 | |||
• | பம்பாய் மாகாணத்துடன் இணைத்தல் | 1 நவம்பர் 1956 | |||
இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பப் பகுதிகளை கொண்டிருந்தது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்ப்பட்டது. சௌராஷ்டிரா மாநிலப் பகுதிகள் 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின் சௌராஷ்ட்டிர மாகாணம் 15-02-1948-இல் சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியாவார் தீபகற்பத்தின் கத்தியவார் முகமையில் இருந்த பெரிய மற்றும் சிறிய சுதேசி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து 15 பிப்ரவரி 1948 அன்று சௌராஷ்டிரா உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1948-இல் சௌராஷ்டிரா மாகாணத்தின் முதலமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்க்ப்பட்டார்.
கத்தியவார் தீபகற்பம் அல்லது சௌராஷ்டிரம் என்பது புவியியல் அடிப்படையில் ஒரே நிலப்பகுதியை குறிக்கிறது. இப்பகுதியில் வாழும் மக்களை சௌராஷ்டிரர்கள் அல்லது கத்தியவாரிகள் என்றழைக்கப்படுகிறார்கள்.