தியனன்மென் சதுக்கம்
From Wikipedia, the free encyclopedia
தியனன்மென் சதுக்கம் (Tiananmen Square) (சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) என்பது சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கமாகவும் சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடமாகவும் உள்ளது.
சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர்.[1][2][3][4][5]