திருப்பலி (வழிபாடு)
From Wikipedia, the free encyclopedia
திருப்பலி அல்லது பலிப்பூசை (Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை கொண்டாட்டம் ஆகும். இதை இயேசு கிறிஸ்துவின் கல்வாரிப் பலியின் (சிலுவை மரணம்) மறு-நிகழ்வாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். திருப்பலி இரத்தம் சிந்தாதப் பலி என்று அழைக்கப்படுகிறது.