துனிசியப் போர்த்தொடர்
From Wikipedia, the free encyclopedia
துனிசியப் போர்த்தொடர் (Tunisia Campaign) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர்த்தொடர். இதில் துனிசியாவுக்கு பின்வாங்கியிருந்த அச்சுப் படைகளை நேச நாட்டுப் படைகள் தோற்கடித்தன. துனிசியப் போர்த்தொடரின் முடிவுடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. இது துனிசியா சண்டை (Battle of Tunisia) என்றும் அழைக்கப்படுகிறது.
துனிசியப் போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதி | |||||||
தூனிஸ் வீழ்ந்த பின்னர் ஜெர்மனிய, இத்தாலியப் போர்க்கைதிகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | Germany இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டுவைட் டி. ஐசனாவர் ஹரால்ட் அலெக்சாந்தர் கென்னத் ஆண்டர்சன் பெர்னார்ட் மோண்ட்கோமரி | ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங் எர்வின் ரோம்மல் யூர்கென் வோன் ஆர்ணிம் (கைதி) ஜியோவான்னி மெஸ்சே (கைதி) |
||||||
இழப்புகள் | |||||||
76,020 பேர் 849 வானூர்திகள் நாசம் | ~3,00,000 பேர் > 1045 வானூர்திகள் நாசம் |
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் அச்சுப் படைகள் தோற்றபின்னர் அவை பின்வாங்கி துனிசியாவுக்குச் சென்றன. கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மி அவற்றை விரட்டி வந்தது. மேற்கிலிருந்து டார்ச் நடவடிக்கை மூலம் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கியிருந்த அமெரிக்கப் படைகள் துனிசியாவைத் தாக்கின. இவ்வாறு இரு திசைகளில் இருந்து துனிசியா நேச நாட்டுப் படைகளால் தாக்கப்பட்டது. ஏழு மாதகால சண்டைக்குப் பின்னர் துனிசியாவிலிருந்த அச்சுப் படைகள் மே 13, 1943ல் சரணடைந்தன. துனிசியப் போர்த்தொடரின் முடிவுடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.