துருகானினி
From Wikipedia, the free encyclopedia
துருகானினி அல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர் (Truganini அல்லது Trugernanner, 1812 - மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் ஆவார். திராவிட இனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவரது இனம் கிபி 1800 வாக்கில் அந்நாட்டில் குடியேறத்தொடங்கிய ஆங்கிலேயர்களால் அழியத்தொடங்கியது. மிருகங்களை போல துப்பாக்கி முனையில் இவர்களை வேட்டையாடிய ஆங்கிலேயர்கள், அதற்கு 'கறுப்பனை பிடித்தல்' (Black Catching) என்றும் பெயர் வைத்தனர். இவ்வாறான கொடூரங்களால் சுமார் 5000 வரை இருந்த இவர்களது எண்ணிக்கை 1830 ஆம் ஆண்டு 75-ஆக குறைந்தது. இவர்களில் கடைசியாக மிஞ்சியது துருகானினி மட்டுமே. இவரும் 1876-ம் ஆண்டு சிறையிலேயே இறந்தார். இவரோடு தாஸ்மேனிய பழங்குடி இனம் முழுமையாக அழிந்தது.
விரைவான உண்மைகள் துருகர்நானர் (துருகானினி), பிறப்பு ...
துருகர்நானர் (துருகானினி) | |
---|---|
1866 இல் துருகானினி | |
பிறப்பு | கி. 1812 புரூணி தீவு, ஆஸ்திரேலியா |
இறப்பு | மே 8 1876 ஹோபார்ட், ஆஸ்திரேலியா |
மற்ற பெயர்கள் | துருகானினி, துருக்கானினி, லல்லா ரூக் |
அறியப்படுவது | தாஸ்மேனியப் பழங்குடியினத்தின் கடைசிப் பெண் |
மூடு