நாட்காட்டி
From Wikipedia, the free encyclopedia
நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும்.
காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நவீன முறையில் உருவாக்கப்படும் கணினிகள், மடிக்கணிகள் போன்றவற்றில் உள்ள நாட்காட்டிகளில் எதிர்வருகின்ற நிகழ்வுகள் மற்றும் பணிகளை ஞாபகம் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன. இவை குறிக்கப்பட்ட நாளில், குறித்த நேரத்தில் ஓசை எழுப்பி பயனருக்கு ஞாபகம் செய்கின்றன. இவ்வசதி புதிய தொழில்நுட்பம் அடங்கிய கைபேசியிலும் உள்ளது.
நாட்காட்டி என்பது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக கூட அமையலாம், உதாரணமாக நீதிமன்ற நாட்காட்கள் இந்த வகையைச் சார்ந்தவை.