பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்
முன்னாள் இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் (Patiala and East Punjab States Union, PEPSU) 1948க்கும் 1956க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த இந்தியாவின் மாநிலமாகும். இது எட்டு முன்னாள் மன்னர் அரசுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது: பட்டியாலா, ஜிந்த், நாபா, கபூர்தலா, பரீத்கோட், கல்சியா, மாலேர்கோட்லா, நாலாகர். இந்தப் புதிய மாநிலம் சூலை 15, 1948 அன்று துவக்கப்பட்டது. 1950இல் முறையாக இந்திய மாநிலமாக ஆனது. இதன் தலைநகரமாக பட்டியாலா இருந்தது. இந்த மாநிலத்தின் பரப்பளவு 26,208 சதுர கிமீயாக இருந்தது. சிம்லா, கவுசாலி, கந்தாகாட், தரம்பூர், சையில் ஆகியனவும் பெப்சுவின் அங்கமாயின.
விரைவான உண்மைகள் பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் (பெப்சு)ਪੈਪਸੂ, தலைநகரம் ...
பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் (பெப்சு) ਪੈਪਸੂ | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1947–1956 | |||||||||||||||||||||||||
தலைநகரம் | பட்டியாலா | ||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||
• இந்தியாவின் விடுதலை | 1947 | ||||||||||||||||||||||||
1956 | |||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||
1941 | 26,208 km2 (10,119 sq mi) | ||||||||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||||||||
• 1941 | 3493685 | ||||||||||||||||||||||||
|
மூடு