பழ. நெடுமாறன்
தமிழ் அரசியல்வாதி, எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
பழ. நெடுமாறன் (Pazha Nedumaran)(10 மார்ச் 1933, மதுரை தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார்.[1] அதனால் இந்திரா காந்தியால் “என் மகன்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். இவர் கருத்து வேறுபாடுகளால் காங்கிரசை விட்டு வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு காமராசர் காங்கிரசு என கட்சியினைத் தொடங்கினர்.
பழ நெடுமாறன் | |
---|---|
பிறப்பு | 10 மார்ச்சு 1933 (1933-03-10) (அகவை 91) மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | அரசியல்வாதி, ௭ழுத்தாளர் |
அறியப்படுவது | உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர், தமிழ்த் தேசிய இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் கூட்டமைப்பின் தலைவர் |