பிராசாத நூல்கள்
From Wikipedia, the free encyclopedia
இந்து சமயத்தில், பிராசாத நூல்கள் இறைவனின் இருக்கை நிலைகளை மனத்தில் கொண்டு அவனை அடைவதற்கு உரிய நெறிகளைக் காட்டுகின்றன. பிராசாதம் என்னும் சொல் இறைவனின் கோலத்தைக் குறிக்கும். இது கலைக்கோலம். இதனை யோகமுத்திரை எனவும் கூறுவர். இந்த யோகமுத்திரைக் கலையை யோகநெறி எனவும் கூறுவர். இது ஓர் அகநெறி. மனப்பக்குவம். மனப்பயிற்சியும் ஆம். தத்துவப் பிரகாசம் என்னும் நூலில் இது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.[1]
இக்காலத்தில் இறைவனின் கோலமான திருநீறு போன்ற பொருள்களையும், இறைவனுக்குப் படையல் செய்த பொருள்களையும் குறிக்கும் வகையில் ‘பிரசாதம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்திவருகின்றனர். பிராசாதம் வேறு. பிரசாதம் வேறு.
திருமந்திரம் [2] பிராசாதத்தை ‘மேதாதி ஈரெட்டு’ என்று குறிப்பிடுகிறது.[3]
கோபப் பிரசாதம் [4] என்னும் நூல் நூலாசிரியரின் சினக்கோலத்தை விரித்துரைக்கிறது.
அடுத்து இறைவனை அடைவதற்கு உரிய பிரசாதத்தை [5] விளக்கும் நூல்கள் தோன்றின.