புதிய குடியேற்றவாதம்
From Wikipedia, the free encyclopedia
புதிய குடியேற்றவாதம் (Neocolonialism) என்பது நேரடியான இராணுவ, அரசியல் ஆதிக்கத்துக்குப் பதிலாக, முதலாளித்துவம், உலகமயமாக்கம், கலாச்சார சக்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு நாடு இன்னொரு நாட்டை (குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவால் குடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடுகளை) தன் ஆதிக்கத்துக்குள் கொணர்கின்ற செயல்பாட்டைக் குறிக்கும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/World_1898_empires_colonies_territory.png/640px-World_1898_empires_colonies_territory.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Colonialism_in_1945_updated_legend.png/640px-Colonialism_in_1945_updated_legend.png)
0.900ம் அதற்கு மேலும்
0.850–0.899
0.800–0.849
0.750–0.799
0.700–0.749 |
0.650–0.699
0.600–0.649
0.550–0.599
0.500–0.549
0.450–0.499 |
0.400–0.449
0.350–0.399
0.300–0.349
under 0.300
தகவல் கிடைக்கப்பெறவில்லை |
இத்தகைய குடியேற்ற ஆதிக்கம் பொருளாதாரம், கலாச்சாரம், மொழி போன்றவற்றில் நிகழ்கின்ற திணிப்புகளாக இருக்கலாம். ஒரு நாடு தனது கலாச்சாரத்தை, மொழியை, தொடர்பு ஊடகங்களை மற்றொரு நாட்டில் பரப்பும்போது அங்கே புகுத்தப்பட்ட நிறுவனங்கள் சந்தையை அந்நாட்டில் விரிவாக்க முடியும். இவ்வாறு, முதலில் பெரிய அளவில் தீங்கில்லாதவை போல் தொடங்கிய வணிக நடவடிக்கைகள் இறுதியில் கலாச்சாரத் தீங்குகளை விளைவிக்கும் காரணிகளாக மாறிவிடுவதால் புதிய குடியேற்றவாதம் தலைதூக்குகிறது. [சான்று தேவை]