புரியிடுதல் (சுடுகலன்)
From Wikipedia, the free encyclopedia
புரியிடுதல் / மரையிடுதல் என்பது, எறியதிற்கு ஓர் சுழற்சியை அளிப்பதற்கு, சுடுகலனின் குழலில் சுருளை வடிவ பள்ளங்களை குடைவதே ஆகும். இந்த சுழற்சி எறியத்தின் காற்றியக்க நிலைத்தன்மையையும் துல்லியத்தையும் மேம்படுத்தும்.
ஒரு முழு சுழற்சியை பூர்த்தி செய்ய தேவைப்படும் தூரத்தை தான் திருகு விகிதம் என்பர். திருகு விகிதம் தான் புரியிடுலை விவரிக்கும். உதாரணமாக: "10 இன்ச்சில் 1 சுழற்சி" (1:10 இன்ச்சு), அல்லது "254மி.மீ.-ல் 1 சுழற்சி" (1:254 மி.மீ.). எந்த அளவிற்கு தூரம் குறைகிறதோ, அந்த அளவிற்கு திருகுதல் "வேகாமாகும்" - இதன் பொருள், நிர்ணயிக்கப்பட்ட திசைவேகத்திற்கு அதிகமான சுழற்சி இருக்கும்.
இரு பள்ளத்திற்கு இடையில் உள்ள உயர்ந்த இடைவெளியை 'மேடு' என குறிப்பிடுவர்.
சில வகைகளில், புரியிடுதலின் திருகு விகிதம், சீராக அதிகரித்து, சன்னம் வெளியேறும் முனையில் அதிகபட்சமாக இருக்கும், இதை பெருக்கத் திருகு என்பர்.[1][2]