புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை
From Wikipedia, the free encyclopedia
இறுதிப் போருக்காக என்ற கோரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர் தமிழரிடம் கட்டாயமாக அல்லது வற்புறுத்தி பண சேகரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக பல ஊடகங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் தொடராக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு "இறுதி யுத்த நிதிக்காக தமிழ்ப் புலிகள் இயக்கம் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு" என்று மார்ச் 15, 2006 அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி நிறுவனமும் செய்தி கட்டுரை ஒன்றை இங்கே வெளியிட்டுள்ளது.