போபால் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
போபால் இராச்சியம் (Bhopal State), தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இசுலாமிய நவாப்புகளால் ஆளப்பட்டது.
விரைவான உண்மைகள் போபால் இராச்சியம்भोपाल रियासत / بھوپال ریاست, தலைநகரம் ...
போபால் இராச்சியம் भोपाल रियासत / بھوپال ریاست | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1707[1]–1949 | |||||||||
குறிக்கோள்: Nasr Minullah[2] | |||||||||
தலைநகரம் | போபால் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி (அலுவல்) மற்றும் இந்தி-உருது | ||||||||
சமயம் | இந்து சமயம் மற்றும் இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
போபால் நவாப் | |||||||||
• 1707-1728 | தோஸ்த் முகமது கான், போபால் நவாப் (முதல்) | ||||||||
• 1926–1949 | ஹமிதுல்லா கான் (இறுதி) | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1707[3] | ||||||||
• முடிவு | 1 சூன் 1949 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
மூடு
பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் துணைப்படைத் திட்டத்தின் கீழ், போபால் இராச்சியம், போபால் முகமையில் 1818 முதல் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி 30 ஏப்ரல் 1949 அன்று இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.[4]