மாகி ஆறு
From Wikipedia, the free encyclopedia
மாகி ஆறு (Mahi river) இந்தியாவின் மேற்கு பகுதியில் பாயும் ஓர் ஆறு ஆகும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தோன்றி இராசத்தான் மாநிலத்திலுள்ள வாகாத் மண்டலத்தின் வழியாகச் சென்று குஜராத்தில் நுழைந்து [[அரபிக்கடல்| அரபிக்கடலில் கலக்கிறது. தபதி ஆறு, சபர்மதி ஆறு, லூனி நதி மற்றும் நருமதை போன்ற ஆறுகளைப் போல மேற்கு நோக்கி பாயும் இந்தியாவின் பல நதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவிலுள்ள பெரும்பாலான தீபகற்ப ஆறுகள் கிழக்கு திசை நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
மாகி Mahi | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | விந்திய மலைத்தொடர், மத்தியப் பிரதேசம் |
முகத்துவாரம் | காம்பத் வளைகுடா, அரபுக் கடல் |
⁃ அமைவு | ஆனந்து மாவட்டம், குஜராத் |
நீளம் | தோராயமாக 580 கிலோமீட்டர். |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | Sevalia[1] |
⁃ சராசரி | 383 m3/s (13,500 cu ft/s) |
⁃ குறைந்தபட்சம் | 0 m3/s (0 cu ft/s) |
⁃ அதிகபட்சம் | 10,887 m3/s (384,500 cu ft/s) |
பிரித்தானிய இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த காந்தா நிறுவனத்திற்கு மாகி காந்தா நிறுவனம் என்று மாகி ஆற்றின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. . இதே போல அராபிய புராணக் கதைகளில் பெரும்பாலும் குறிப்பிடப்படும் மாக்வாசிசு எனப்படும் மேட்டுக்குடி சூறையாடிகளைக் குறிக்கவும் இப்பெயர் பயன்பட்டது [2]. மத்தியப் பிரதேசத்திலுள்ள தார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிண்டா கிராமத்தில் மாகி நதி அசலாகத் தோன்றுகிறது. அங்கிருந்து வடமேற்கு திசையில் திரும்பி இராசத்தான் மாநிலத்திற்குள் நுழைந்து, பின்னர் தென்மேற்கு திசையில் குஜராத் மாநிலத்தின் வழியாக வடோதரா நகரத்தின் புறநகர்ப் பகுதி வழியாகப் பாய்கிறது. 360 மைல் (580 கி.மீ) தொலைவுக்கு நீளும் இவ்வாற்றின் பாதை கம்பாத்தைக் [2] கடந்து ஒரு பரந்த நதி முகத்துவாரம் வழியாகக் கடலுக்குள் நுழைகிறது. கம்பாத் வளைகுடாவின் ஆழமற்ற தன்மைக்கும், ஒரு காலத்தில் வளமான துறைமுகங்களை கொண்டிருந்தமைக்கும் மாகி நதி கொண்டு வந்த மண் பங்களித்தது. ஆற்றங்கரை நிலத்தின் உயரத்தைக் காட்டிலும் கனிசமான தாழ்வாக ஆற்றங்கரை உள்ளதால் பாசனத்திற்கு அதிக பயன் இல்லை.
மாகி நதி ஏராளமான மக்களால் வணங்கப்படுகிறது, மேலும் அதன் கரையோரத்தில் பல கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. ஆற்றின் பரந்த தன்மை காரணமாக மகிசாகர் என்று பிரபலமாக விவரிக்கப்படுகிறது. குசராத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மகிசாகர் மாவட்டம் இந்த புனிதமான நதியிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. மாகி நதி கடக ரேகையை இரண்டு முறை சந்திக்கிறது.