மிசோ தேசிய முன்னணியின் எழுச்சி
From Wikipedia, the free encyclopedia
மிசோ தேசிய முன்னணி எழுச்சி என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாகாணத்தில் இருந்த மிசோரம் மாவட்டத்தில் வாழ்ந்த மிசோ மக்களுக்காக ஒரு இறையாண்மை கொண்ட தேசிய அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாகும். இந்த எழுச்சி 28 பிப்ரவரி 1966 இல் தொடங்கியது.[1][2] 1 மார்ச் 1966 அன்று முன்னாள் இராணுவ வீரர் லால்தெங்கா[3]தலைமையிலான மிசோ தேசிய முன்னணிப் படை உருவானது. இந்த முன்னணிப் படையினர், அசாம் மாகாணத்தின் மிசோரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்திய பின்னர் சுதந்திர மிசோரம் அரசை பிரகடனம் செய்தது. 25 மார்ச் 1966 அன்று மிசோ தேசிய முன்னணியினர் கைப்பற்றிய அனைத்து இடங்களையும், இந்திய அரசின் வான்படை, தரைப்படை மற்றும் துணை இராணுவப் படைகள் பதிலடி கொடுத்து மீண்டும் கைப்பற்றியது.[4]
மிசோ தேசிய முன்னணியின் எழுச்சி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சிகள் பகுதி | |||||||||
மிசோரம் வரைபடம் (முன்னர் மிசோ மாவட்டம்) |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இந்தியா மியான்மர் | மிசோ தேசிய முன்னணி | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
லெப். ஜெனரல். சாகத் சிங் லெப். ஜெனரல் சாம் மானேக்சா | மிசோ மக்கள் தலைவர் லால்தெங்கா இந்திய பாதுகாப்புச் செயலாளர் இந்திய வெளியுறவுச் செயலாளர் |
||||||||
படைப் பிரிவுகள் | |||||||||
அசாம் ரைப்பிள்ஸ் எல்லைப் பாதுகாப்புப் படை கூர்க்கா ரைப்பிள்ஸ் பீகார் ரெஜிமெண்ட் | மிசோ தேசிய இராணுவம் | ||||||||
இழப்புகள் | |||||||||
59 பேர் கொல்லப்பட்டனர் 126 பேர் காயமடைந்தனர் 23 காணாமல் போயினர் | 95 பேர் கொல்லப்பட்டனர் 35 பேர் காயமடைந்தனர் 558 சிறை பிடிக்கப்பட்டனர். |
கிளர்ச்சியின் தீவிரம் காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்தாலும், அடுத்த இரண்டு தசாப்தங்களில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1986ல் இந்திய அரசும், மிசோ தேசிய முன்னணி தலைவர்களும் இணைந்து மிசோரம் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. இதன் மூலம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. மிசோரமுக்கு தனி மாநிலத் தகுதியும், தனி உயர் நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.