மூன்றாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் அல்லது மூன்றாம் ஆப்கான் போர் (Third Anglo-Afghan War also referred to as the Third Afghan War),) (பஷ்தூ: د افغان-انګرېز درېمه جګړه), ஆப்கானித்தான் அமீரகப் படைகள், பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை 6 மே 1919 முதல் 8 ஆகஸ்டு 1919 முடிய நடத்திய தாக்குதல்களை, பிரித்தானியப் படைகள் எதிர்கொண்டனர்.[5][6][7][8][9]
மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
the Interwar Period பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஆப்கானித்தான் | ஐக்கிய இராச்சியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
பலம் | |||||||
50,000 - 80,000 பஷ்தூன் பழங்குடிப் படைகள் | 8 டிவிசன் படைகளில், 5 தரைப்படைகள், 3 குதிரை வீரர்கள் மற்றும் பீரங்கிகள் | ||||||
இழப்புகள் | |||||||
1,000 இறந்தனர்[3] | போரில் 236 கொல்லப்பட்டனர், 1,516 நோயால் இறந்தனர் அல்லது காயமுற்றனர்.[4] |
இப்போரில் ஆப்கானித்தான் படைகள் வென்றதால், பிரித்தானியர்களின் தலையீடு இன்றி, வெளியுறவு விவகாரங்களில் தன்னாட்சியுடன் ஆப்கானித்தான் செயல்பட வழிவகுத்தது.[10] இப்போரில் பிரித்தானியர்கள் தோற்றாலும், ராவல்பிண்டி உடன்படிக்கையின் படி, ஆப்கானியர்கள் முன்னர் இரண்டாம் ஆங்கிலேய - ஆப்கான் போரில் வரையறுத்து ஒப்புக் கொண்ட துராந்து எல்லைக்கோட்டை இப்போர் முடிவிலும் ஏற்றுக்கொண்டனர். இனி பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பகுதிகளில் ஆப்கானியப் படைகள் குறுக்கீடு செய்வதில்லை என ஆப்கானியர்களால் உறுதியளிக்கப்பட்டது.