வேள்வி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருளாகும். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவனுக்கு புனிதமாகக் கருதும் பொருள்களை அர்ப்பணித்தல் யாகமாக கருதப்படுகிறது.[1]
வேள்வி, ஹோமம், ஓமம் என்று என்றும் அழைக்கப்பெறுகிறது. யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
யக்கியங்கள்
அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம்ம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
சில யாகங்கள்
சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
- அசுவமேத யாகம்
- புத்திர காமேஷ்டி யாகம்
- சத்துரு சம்ஹார யாகம்
- ராஜசூய யாகம்
- கனகதாரா யாகம்
- அமாவாசை நிகும்பலா யாகம்
- கிரிகொரஹ யாகம்
- சத சண்டி யாகம்
- சந்தான கோபால யாகம்
- புஷ்ப யாகம்
- நிகும்பலா யாகம்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads