இராஜீவ் காந்தி படுகொலை
1991 இந்தியாவின் 6வது பிரதமரின் படுகொலை தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது / From Wikipedia, the free encyclopedia
இராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மனித குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இராஜிவ் காந்தி தவிர குறைந்தது 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.[1]. இத்தாக்குதல் தேன்மொழி இராசரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம்.