ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ்
From Wikipedia, the free encyclopedia
ரைக்ஸ்ஃபியூரர் எஸ் எஸ் (Reichsführer-SSⓘ) சிறப்பு பதவியாக ஜெர்மனியில் 1925 லிருந்து 1945 வரையுள்ள இடைப்பட்டக் காலத்தில் சுத்ஸ்டாஃபல் (எஸ் எஸ்-SS) படைப்பிரிவினரின் அதிகபட்ச அதிகாரம் கொண்டப் பதவியாக பயன்படுத்தப்பட்டது. 1926 இல் பெர்ச்டோல்ட் என்பவரால் இப்பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் 1929 முதல் ஹைன்ரிச் இம்லர் இப்பதவியை வகித்தார். எஸ் எஸ் அமைப்பின் தலைமைத் தளபதி நிலையைக் குறிக்கும் இச்சொல் சாதாரணமாக 1934 வரை அழைக்கப்பட்டு வந்த்து. ஹைன்ரிச் இம்லர் ஸ்ட்ரோமப்டேலுங் ( எஸ் ஏ-SA) அமைப்பினருக்கும் அதன் தலைவர் எர்னஸ்ட் ரோம் என்பவருக்கும் எதிராக நிகழ்த்திய நீள் கத்திகளுடைய இரவு (Night of the Long Knives) என்ற நிகழ்வுக்குப் பின்னர் இப்பதவி ஜெர்மன் இராணுவ உயர் தளபதியின் பதவி (ஜெனரல் பீல்டு மார்ஷல்) அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்பட்டது.[1] ஒரே காலத்தில் எவரும் ரைக்ஸ்ஃபியூரர் மற்றும் எஸ் எஸ் தலைமை என்ற இரு பதவிகளையும் வைத்திருந்ததில்லை இதை நிருபித்தவர் இம்லர் மட்டுமே.