விந்தியப் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
விந்தியப் பிரதேசம் (Vindhya Pradesh) (1948 - 1956) மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேச பகுதிகளில், 1948 முதல் 1956 முடிய செயல்பட்ட முன்னாள் மாநிலம் ஆகும். இதன் தலைநகரம் ரேவா ஆகும். இம்மாநிலம் 23,603 சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்தது.[1] இந்தியப் பிரிவினைக்குப் பின் 4 ஏப்ரல் 1948ல், மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர் நிலப்பரப்புகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த 35 சுதேச சமஸ்தானப் பகுதிகளைக் கொண்டு விந்தியப் பிரதேசம் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ரேவா ஆகும். இதன் வடக்கில் உத்தரப் பிரதேசம், தெற்கில் மத்தியப் பிரதேசம் இருந்தது.
விரைவான உண்மைகள்
விந்தியா | |||||
இந்திய மாநிலம் | |||||
| |||||
சின்னம் | |||||
1951 இந்தியாவின் வரைபடத்தில் விந்தியப் பிரதேசம் நடுவில் காட்டப்பட்டுள்ளது. | |||||
தலைநகரம் | ரேவா | ||||
வரலாறு | |||||
• | விந்தியப் பிரதேச மாநிலம் நிறுவுதல் | 1948 | |||
• | மாநில மறுசீரமைப்புச் சட்டம் | 1956 | |||
பரப்பு | 61,131.5 km2 (23,603 sq mi) | ||||
Population | |||||
• | 36,00,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 58.9 /km2 (152.5 /sq mi) | ||||
Pranab Kumar Bhattacharyya (1977). Historical Geography of Madhya Pradesh from Early Records. Delhi: Motilal Banarsidass. pp. 54–5. |
மூடு
மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் படி, விந்தியப் பிரதேசம், மற்றும் மத்திய பாரதம் மாநிலங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2]