வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்
From Wikipedia, the free encyclopedia
வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் (Wolfgang Amadeus Mozart, ஜனவரி 27, 1756 - டிசம்பர் 5, 1791) ஒரு புகழ்பெற்ற, சிறந்த, ஐரோப்பிய செவ்விசையமைப்பாளர் ஆவார். இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல ஒத்திசைகள், ஆப்பெராக்கள் போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர்.
வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் | |
---|---|
மோட்சார்ட் ஏறத்தாழ. 1780 | |
பிறப்பு | Johannes Chrysostomus Wolfgangus Theophilus Mozart 27 சனவரி 1756 சால்ஸபர்க் |
இறப்பு | 5 திசம்பர் 1791 (அகவை 35) வியன்னா |
பணி | இசையமைப்பாளர், இசைக் கலைஞர் |
சிறப்புப் பணிகள் | See list of compositions by Wolfgang Amadeus Mozart, list of operas by Wolfgang Amadeus Mozart |
பாணி | Classical period, chamber music, ஆப்பெரா, ஒத்தின்னியம் |
குழந்தைகள் | Franz Xaver Wolfgang Mozart |
கையெழுத்து | |
மோட்சார்ட் இளம் வயதிலிருந்தே தமது திறமையை காட்டி வந்துள்ளார். கிளபத்திலும் வயலினிலும் தேர்ந்த மோட்சார்ட்டு ஐந்தாம் அகவையிலேயே இசைத் தொகுக்கத் தொடங்கி ஐரோப்பிய அரச குடும்பங்களில் நிகழ்த்தினார். 17ஆவது அகவையில் சால்சுபர்கு அரச இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அமைதியுறாது பல இசையாக்கங்களை தொகுத்தவாறு மேலும் உயர்நிலைக்காக தேடி அலைந்தார். இவாறு 1781இல் வியன்னா சென்றபோது, சால்சுபெர்கில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் எவ்வித நிதி ஆதாரமுமின்றி தலைநகரில் வாழ்ந்திருந்த மோட்சார்ட்டின் புகழ் பரவலாயிற்று. வியன்னாவில் அவரிருந்த கடைசி நாட்களில் அவருடைய பல புகழ்பெற்ற ஒத்திசைகள், ஆப்பெராக்கள், கான்செர்டோக்களை எழுதினார். இளம் அகவையிலேயே ஏற்பட்ட அவரது மரணம் குறித்து பல கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அவர் இறக்கும்போது கான்சுடான்சு என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர்.
600க்கும் மேற்பட்ட இசைவாக்கங்களை அவர் தொகுத்துள்ளார்; இவற்றில் பல ஒத்திசை, இசைக்கச்சேரி, அரங்கவிசை, ஆப்பெரா, குழுவிசை வகைகளில் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. பன்னெடுங்காலமாக போற்றப்படும் செவ்விசை இசைத்தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். பிற்காலத்திய மேற்கத்திய இசையில் இவரது தாக்கம் அளவிடற்கரியது. தமது துவக்க கால இசைவாக்கங்களை பேத்தோவன் மோட்சார்ட்டின் பாணியிலேயே இயற்றினார். "இத்தகைய திறமையை இன்னமும் நூறு ஆண்டுகளுக்குக் காணவியலாது" என சமகால இசையமைப்பாளர் ஜோசப் ஹேடன் எழுதினார்.[1]