இராபர்ட்டு கால்டுவெல்
திராவிட மொழியியலின் தந்தை / From Wikipedia, the free encyclopedia
இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814–28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும், பழங்கிரேக்கத்திலும், தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார்.[1] திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.
விரைவான உண்மைகள் இராபர்ட்டு கால்டுவெல், பிறப்பு ...
இராபர்ட்டு கால்டுவெல் | |
---|---|
பிறப்பு | இராபர்ட்டு கால்டுவெல் 7 மே 1814 அயர்லாந்து |
இறப்பு | 28 ஆகத்து 1891 கொடைக்கானல், பழனி மலைகள், தமிழ்நாடு |
கல்லறை | இடையான்குடி, திருநெல்வேலி மாவட்டம் |
தேசியம் | பிரித்தானியர் |
பணி | சமயப்பரப்பாளர், மொழியியலாளர் |
அறியப்படுவது | தென்னிந்திய பிஷப் |
மூடு