கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது இயேசு கிறிஸ்து, மீண்டும் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்குத் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கையைக் குறிக்கும். இது மனிதர் எதிர்பாரா காலத்தில் நடக்கும் என நம்பப்படுவதால் இதனை இரகசிய வருகை என்றும் அழைப்பர். இந்த நிகழ்வினைப் பற்றிய முன் அறிவிப்பு நற்செய்தி நூல்களில் உள்ளது. உலக முடிவினைப் பற்றிய எல்லா கிறித்தவப் பிரிவுகளின் நம்பிக்கையிலும் இந்த நிகழ்வு இடம் பெறுகின்றது. ஆனாலும் இது எவ்வாறு, எப்போது நிகழும் என்பதைப் பற்றிய ஒத்த கருத்து கிறித்தவ உட்பிரிவுகளினரிடையே இல்லை.
நைசின் விசுவாச அறிக்கையில் இது (இயேசு) ... சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்' எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. இது கிறித்தவ விசுவாசங்களில் அடிப்படையான ஒன்றாகக் கருதப்படுகின்றது.