குருதிப் பரிசோதனை
From Wikipedia, the free encyclopedia
குருதிப் பரிசோதனை (இரத்தப் பரிசோதனை) என்பது இரத்தக் குழாயிலிருந்து இரத்தத்தை எடுத்துச் செய்யப்படும் பரிசோதனையாகும். நோய்க் கிருமிகளின் இருப்பு, ஊட்ட அளவு, மருந்துச் செறிவு, உடற்பகுதிகளின் தொழிற்பாடு போன்ற பலவற்றை ஆய்ந்தறியும் பொருட்டு குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. மருத்துவப் பரிசோதனைகளில் மிக அதிகமாக மேற்கொள்ளப்படுவது குருதிப் பரிசோதனையாகும்.