சப்த தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
சப்த தீவுகள் என்பது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். "சப்த" என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது. அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:
- லைடன் தீவு (வேலணைத்தீவு)
- புங்குடுதீவு
- நயினாதீவு (மணிபல்லவம்/ மணிபல்லவத் தீவு)
- காரைநகர்
- நெடுந்தீவு
- அனலைதீவு
- எழுவைதீவு